“பாட்டினில் அன்புசெய்”

SRS தமிழ் வானொலி 6ஆம் ஆண்டு விழா.
கடந்த மாசி மாதம் 15ம் திகதி சனிக்கிழமை இலண்டனில் HILL HOUSE COMMUNITY CENTRE HILL HOUSE
அரங்கில் SRS தமிழ் வானொலி 6ஆம் ஆண்டு விழா, இடம்பெற்றது. இந்த நிகழ்வினூடாக சேகரிப்பட்ட நிதி சத்துருக்கொண்டான் – மட்டக்களப்பு ஸ்ரீ ஞான சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை” அமைப்பின் கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டு, பாடசாலையின் கட்டிட வேலை துரிதமாக நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. SRS தமிழ் வானொலி உறவுகள் மற்றும் உதவிக்கரங்கள் நீட்டிய அனைத்து சேகரிக்கப்பட்ட நிதியினால் சத்துரக்கொண்டான் அற நெறி பாடசாலை கட்டிட நிதிக்கும், கொழும்பு அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளியினால் “கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்களால் கதிர்காம ஆலயப்பணி கட்டிட நிதி திரட்டலுக்குரிய மாபெரும் சேவைக்கும் நம் குழுமத்தினாலும் சிறு உதவி இம்முறை செய்திட நம் குழுமத்தினால் “பாட்டினில் அன்புசெய்” மூலம் வழங்கவும் எமக்கு சந்தர்ப்பம் அமைந்தது மகிழ்ச்சியே..
பிரதம விருந்தினராக “கலாபூசணம்”“சங்கீதவித்துவான்” திருமதி வத்சலாதேவி சங்கரநாராயணன் அம்மையார் அவர்களும், சிறப்பு விருந்தினராக பின்னனிப்பாடகி ளுரிநச ளுiபெநச பரீதா அவர்களும் இணைந்து சிறப்பித்தனர். SRS தமிழ் வானொலி 6ஆம் ஆண்டு நிகழ்வில் “இசைக் கலாமணி” “கலாபூஷணம்””சங்கீத வித்துவான்” திரு.ஐ. சங்கர நாராயணன் ஞாபகார்த்த விருது 2024” கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும் இடம் இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
இலங்கையை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் மட்டுமன்றி ஏனைய ஊடகத்துறையிலும் 50 ஆண்டுகள் வழங்கிய சேவையையும் வாழ்நாளில் ஆற்றிய சாதனைகளையும் வரவிருக்கும் காலமும் கொண்டாடும் வகையில் வாழ்ந்த ஒலிபரப்பு விற்பன்னர் சொற்கோ வி.என்.மதிஅழகன் அவர்களுக்கு “பொன்னொளி” விருதும் “கலாபூஷணம்””சங்கீத வித்துவான்”திரு.ஐ.சங்கரநாராயணன் அவர்களின் சிரேஷ்ட மாணவன், கலைஞர் திரு. அமல்ராஜ் பர்ணாந்து அவர்களுக்கு “சிரஞ்சீவி” விருதும், மட்டக்களப்பினை பிறப்பிடமாகவும் ஐக்கியராச்சியத்தை வதிவிடமாகவும் கொண்டு வாழ்நாளில் ஆற்றிய சாதனைகளுக்காக பல்துறைக் கலைஞர் திரு கோவிலூர் செல்வராஜன் அவர்களுக்கு “சிரஞ்சீவி” விருதும் ,இலங்கையை பிறப்பிடமாகவும் நெரர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட அமுத மொழி கொணட் ஆளமை ஈழத்து எழுத்தாளர் திருமதி. பவானி சற்குணசெல்வம் அவர்களுக்கு “அமுதக்கதிர்” விருதும், சங்கீத வித்துவான் திருவாரூர் திருமதி. சீதாலட்சுமி சிவாஜி அவர்களுக்கு “நாதசுரபி”விருதும், கலைஞர் திருமதி. சரோஜினி செல்வகுமார் அவர்களுக்கு “நாதசுரபி” விருதும், கலைஞர் திருமதி. ராஜம் கிருஷ்ணசுவாமி அவர்களுக்கு “நாதசுரபி” விருதும், கலைஞர் திரு. கிரிதரன் கந்தசாமி அவர்களுக்கு “நாதசுரபி” விருதும், SRS தமிழ் வானொலி கலைஞர் திருமதி.அமுதா ரவிஷான் அவர்களுக்கு “மதுரமதி” விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்தோடு SRS தமிழ் வானொலி யின்; சிறப்பு விருதுகளாக வானொலிக்கு வழங்கும் சிறப்பு சேவையை பாராட்டி வானொலிக் கலைஞர்களையும் கௌரவித்து நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது. SRS தமிழ் வானொலி ஸ்தாபகர், உரிமையாளர் திரு. ரவிஷங்கர் சங்கரநாராயணன் (ரவிஷான்) அவர்களின் 40 ஆண்டு கால இசைப்பயணத்தை வாழ்த்தி பெரியோர்களினால் கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், கர்நாடக மிருதங்க இசை, பரத நாட்டிய நிகழ்வுகள், கிராமிய நடனம், தமிழ் பேச்சு, குறு மேடை நாடகம், இன்னிசை கானங்கள் என பல் சுவை நிகழ்வுகளுடன் திரு. ரவிஷான் தலைமையில், திரு.ரமேஷ் கந்தசாமி திருமதி.நிறைஞ்சனா சுரேஷ்குமார் இருவரின் மேடைத் தொகுப்புடன் மண்டபம் நிறைந்த மக்களுடன் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்று நிறைவேறியது.