முப்பத்தோரு ஆண்டுகள் !
வரலாற்றின் கல்வெட்டாய்
வழுவாத சொல்வெட்டாய்
வெற்றிமணியின்
மற்றுமொரு மைல்கல் !
தேசங்களின் எல்லை கடந்து
நேசங்களின் அன்பைக் கடைந்து
இலக்கியம் சமைத்த
இனிமையின் பயணம் !
கவிதைக் கம்பளங்களும்
கட்டுரைக் கைத்தடிகளும்
சிறுகதைகளும் சுவைத்த
கதம்பத்தின் களியாட்டம் !
வன்மத்தின் எல்லுடைத்து
பிரிவினையின் பல்லுடைத்து
அன்பினையே தருகின்ற
விருந்தின் பரிமாற்றம்
அன்பொழுகும் சிவகுமரன்
அயராது இழுத்து வந்த
சமத்துவ சமுதாய
இலக்கியத்தின் தேரோட்டம்
உள்ளூர வாழ்த்துகிறேன்.
நில்லாமல் பயணிக்க !
அன்புடன்
சேவியர்
![]()
