யப்பானியர்கள் உணவுக்குப் பதிலாகமாத்திரைகளை உண்ணுகிறார்கள்.
உலகம் “நவீனம்” எனும் அரக்கனின் பிடியில் சிக்குண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த உலகில் மனிதர்கள், இருந்த இடத்தில் இருந்து கொண்டு உலகத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கின்றனர். எல்லா விடயங்களும் கேள்வி எழுப்பும் விடயங்களாகி விட்டன. புதிய புதிய கண்டுபிடிப்புகள், மனிதர்களை வெறும் பொருட்கள் போலவும் வேறு ஒரு உலகத்திற்கும் கொண்டு சென்றுள்ளன. ஒன்று பிறகு மற்றொன்று என்று அவை தொடர்ந்தவாறு வளர்ந்துகொண்டு வருகின்றன.
AI தொழில்நுட்பங்களின் வளர்ச்சி – ஒரு பக்கம் உலகத்துக்கு வளர்ச்சி போல் தோன்றினாலும், மற்றொரு பக்கம் சமூக கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் பல நாடுகளைக் கொண்ட ஒரு கட்டமைப்பு; அந்த ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கு தனித்துவமான கலாச்சாரம், பண்பாடு என ஒரு சிறப்பை கொண்டுள்ளன. ஆனால் இந்த நவீன வளர்ச்சிகள், ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவத்தையே பாதிக்கின்றன என தோன்றுகிறது. ஒரு சமூகத்தின் உயர்வை எப்படி அறிய முடியும் என்றால், அதன் கலாச்சார விழுமியங்களைப் பார்க்க வேண்டும். உதாரணமாக, தென்னிந்தியாவின் கீழடியில் கிடைக்கப்பெற்ற மண்பாண்டங்கள், தங்கம், உலோகம் போன்றவற்றைக் கொண்டு, தமிழர்கள் களிமண்ணில் பொருட்களை தயாரித்தனர், உலோகங்களை உருக்கி ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
எனவே, எமது சமூகத்தின் வாழ்வியல் அடையாளம் என்னவென்றால், அது நமது வாழ்க்கை முறையும், விழுமியங்களுமாகும். ஆனால் அதில் நவீனத்தின் கலப்பு இருந்தால் நம் தனித்துவம் இழக்கப்படும். அப்போதுதான் கேள்வி எழுகிறது – நவீனம் இல்லாமல் எப்படி முன்னேற முடியும்?
நவீனத்துடன் நமது விழுமியங்களையும் பேணிக்காக்கவேண்டும். நமது கலாச்சார விழுமியங்களை மறந்து நவீனத்துடன் கலந்து விட்டால், அந்தச் சமூகம் அடையாளம் இழந்த சமுதாயமாக மாறிவிடும்.
எனக்குத் தெரிந்த ஜப்பானிய நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர் சொன்னார் – அதிகமாக வேலை செய்கின்ற ஜப்பானியர்கள் உணவுக்குப் பதிலாக மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். மனித நேயம், குடும்பம், ஒற்றுமை ஆகியவைகள் அவர்களிடம் மெதுவாக குறைந்துவிட்டன. குறிப்பாக சில ஜப்பானியர்கள் சிலிக்கோன் போலி பெண்கள் மற்றும் குடும்பங்களைக் கொண்டு வாழ்க்கையைத் தொடர்ந்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
கடந்த மாதம் ஜப்பான் அரசு, மக்கள் அதிகமாக குழந்தைகள் பெற வேண்டும், இல்லையெனில் நாட்டின் எதிர்கால வளர்ச்சி பாதிக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தியது. நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், இன்னும் சில ஆண்டுகளில் தனது வளர்ச்சியிலேயே பின்னடைவைக் காணும் நிலைக்கு வந்துள்ளது. இது ancient Japanese social values எனும் பாரம்பரிய விழுமியங்கள் மறைந்து போனதன் விளைவாக தோன்றுகிறது.
நவீனம் வளர்த்த கொள்கைகளின் எதிர்மறை விளைவுகள்:
நவீனத்தால் மக்கள்:
குடும்பம், வாழ்க்கைமுறை, சமூகம், கலாச்சாரம், விழுமியங்கள் போன்றவற்றில் சிந்திக்காமல், பொருளாதார உயர்வை மட்டுமே இலக்காகக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இது மனிதர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது. சக மனிதருடன் பழகும் பழக்கம் குறைந்துவிட்டு, இயந்திரங் களோடு பழகும் நிலைக்கு அழுத்துகிறது.
அழிந்து வரும் முக்கியமான சமூக மற்றும் கலாச்சார அம்சங்கள்:
மரபுக்கேற்ப நடக்கும் திருமணங்கள் மற்றும் விழாக்கள்:
இப்போது சடங்குகள் எளிமைப்படுத்தப்பட்டு, அதன் ஆழமும் அர்த்தமும் குறைந்துவிட்டன.
முதியோருக்கான மரியாதையின் குறைவு:
அறிவும் அனுபவமும் கொண்டவர்களாக இருந்தும், அவர்களை மீம்ஸ்களில் ரசிக்கும் அளவுக்கு மதிப்பு இழந்திருக்கிறார்கள்.
நட்பு உறவுகள் – நேரடி உறவுகளின் இழப்பு:
நேரில் சந்தித்து பேசும் பழக்கம் மாறி, ஆன்லைன் உரையாடல்களாகவே சுருங்கிவிட்டது.
வணிகத்துடன் கலந்த கலாசாரம், கலை, மொழி:
நம் சொந்த கலை, இலக்கியம், நாடகம், ஓவியம், மருத்துவம் போன்றவை வணிக நோக்கங்களால் கரைந்துவிட்டன.
எதிர்காலம் – எச்சரிக்கையா அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
நவீன உலகத்தை முழுமையாக எதிர்க்க முடியாது. ஆனால் அதை சமனாக்கிக் கொண்டு, நமது பாரம்பரியங்களையும் பாதுகாத்து செல்ல வேண்டியது நமது கடமை.
தீர்வுகள்:
மாணவர்கள் பள்ளிக்கல்வியில் இருந்தே கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
ஊடகங்களில் மரபு கதைகள், இலக்கியம் மற்றும் அறம் பற்றிய நிகழ்ச்சிகள் அதிகரிக்க வேண்டும்.
குடும்பங்கள் ஒன்றுகூடி மரபு விழாக்களை கொண்டாட வேண்டும்.நமது சொந்த கலை, மொழி, பண்பாட்டு சார்ந்த உள்ளடக்கங்களை ஊக்குவிக்க வேண்டும்.
நவீனம் நம்மைத் தாண்டி வளர்ந்தாலும், அதை ஒருவேளை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நமது கலாச்சார விழுமியங்களுடன் இணைத்து வாழ்ந்தால் – அதுதான் நமக்கு ஒரு நிம்மதியான, நிலையான, நம்பிக்கையுள்ள சமூகத்தை உருவாக்கும் வழி. அதுவே நமதூர், நமக்கே உரிய வாழ்வியல் எனும் உணர்வை மீண்டும் உயிர்ப் பிக்கும். “நவீனம் என்பது ஒரு கருவி; வாழ்க்கையின் இலக்கு அல்ல” – என்பதை நாம் புரிந்து கொள்வதே இன்றைய தலைமுறையின் பெரிய பொறுப்பு.
![]()
