என்ரை ஆச்சி

காரைக்கவி கந்தையா பத்மானந்தன்
இண்டைக்கு விடியக்காலமை வெள்ளவத்தைக்குப் போன இடத்தில என்ரை கூட்டாளி ஒருத்தனைக் கண்டனான். வழக்கமா என்னைக் கண்டா பழைய அரசியல்வாதி மாதிரி வளவளவெண்டு கதைப்பான். ஆனா இண்டைக்குப் பேசாம நிக்க என்னடா உன்ரை வீட்டம்மா வழக்கம்போல உன்னை வெருட்டிப்போட்டாவோ எண்டு கேட்டன்.
என்னண்ணை நீங்க எனக்குச் சரியான பல்லுக்கொதி கதைக் கேலாம இருக்கெண்டான்.
நான் அட..அப்படியே சங்கதி …நீ .ஒவ்வொரு சனியும் நல்லெண்ணை வைச்சுத் தோயிறனிதானே எண்டன்.
என்னண்ணை பகிடியே விடுறியள் இஞ்சை இருக்கிற வேலையளுக்கு நல்லெண்ணை வைச்சுத் தோஞ்சு மினக்கெடேலுமே. சம்போ வைச்சுத்தான் தோயிறனான் அண்ணை எண்டான்.
நான் அவனிட்டை எட பேயா நல்லெண்ணெய் வைச்சு ஒவ்வொரு சனியுந்தோஞ்சா உந்தப் பல்லுக்கொதி கண்குத்து காது குத்து மண்டை இடி ஒண்டும் வராதெல்லே எண்டன்.உதைத்தானே அவ்வையார் சனி நீராடு எண்டு சொன்னவ தெரியாதோ எண்டன்.அதோட சாப்பாட்டுக்கும் நல்லெண்ணை சேத்தா சலக்கொதி மூலக்கொதி வயித்தெரிச்சல் சமியாக்குணம் மேலால கீழால போற வாய்வுப்பிரச்சினை கொலஸ்றோல் எண்டு ஒரு கோதாரியும் வராது எண்டன் . குத்தரிசிச்சோறும் நல்லெண்ணை விட்டுக்குழைச்ச அம்மியில அரைச்ச இஞ்சிச் சம்பலும் அஞ்சாறு உரிச்ச சின்ன வெங்காயம் தான் அடிக்கடி என்ரை மத்தியானச் சாப்பாடு.
சாப்பாட்டில நல்லெண்ணையும் நல்லெண்ணை முழுக்கும் எத்தினையோ விசயங்களுக்கு நல்லம் எண்டு என்ரை ஆச்சி சொல்லுறவ. அப்புவும் ஆச்சியும் உந்த நல்லெண்ணைச் சாப்பாடும் தோய்ச்சலும் தவறாயினம். அவைக்கு கண்ட கிண்ட வருத்தம் வாதை ஒருநாளும் வரேல்லை. முழுக்கு அண்டைக்கு அப்பு விடியவே தலைக்கு கொஞ்ச எண்ணை வைச்சுக் கொண்டு ஆட்டிறைச்சிப்பங்கு வாங்கப் போடுவார். அப்பு இறைச்சியை வெள்ளணக் கொண்ணந்ததுமே ஆச்சியும் தலையிலை வைச்ச கொஞ்ச நல்லெண்ணையோட இருந்து கொண்டு வந்த கறியை நோண்டிக் கழுவி கறிவைச்சு சோத்து உலையை வைப்பா
.
பேந்து ரெண்டு பேரும் முத்தத்தில இருத்து ஆளாளுக்கு மாறி மாறி நல்லா எண்ணை பிரட்டித் தேய்ப்பினம் . அப்பு ஒரு கோமணம் கட்டி இருப்பார் ஆச்சி பாவாடையைத் தூக்கி இடைக்கட்டு கட்டியிருப்பா. உப்பிடி எண்ணை பிரட்டுறதைத்தான் இப்ப பொடி மசாஜ் எண்டுகினம், அதுமட்டுமே அதுக்கெண்டு காசையும் செலவளிக்கினம் . நல்லா எண்ணை பிரட்டித் தேச்ச பிறகு அப்பு சிரட்டையில கொஞ்சம் கறி எடுத்துக் கொண்ணந்து முத்தத்து வேப்ப மரத்துக்குக் கீழை வைப்பார்.
பேந்து காலமையே வாங்கியந்து வேலிக்கரை பூவரசுக்கு கீழை வைச்ச கள்ளுப்போத்திலை எடுத்தந்து மணலிலை இருந்துகொண்டு கள்ளைச் சிரட்டையில ஊத்தி இறைச்சியையும் இடைக்கிடை சப்பிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமா வாயை சிரட்டையிலை பட்டும் படாம வைச்சுக்கொண்டு ரசிச்சு ரசிச்சுக் குடிப்பார்.
அப்பு கள்ளுக்குடிச்சுக்கொண்டு இருக்கேக்கை ஆச்சி செவ்வரத்தம் இலை இல்லாட்டில் முசுட்டை இலையோடை வெந்தயம் எல்லாம் எடுத்து சீயக்காயோட சேத்து பழைய உரலில இடிச்சு எடுத்து ஒரு சட்டியிலை போட்டு அதுக்குள்ளை பழங்கஞ்சியை விட்டுக்கலக்குவா. பேந்து அப்பு கள்ளுக் குடிச்சு முடிய ரெண்டு பேரும் கிணத்தடிக்குப் போவினம். கிணத்தடிக்குப்போனா அப்பு ஆச்சிக்கு தண்ணி அள்ளித்தலையிலை ஊத்துவார். பேந்து அவவுக்கு சீயக்காயைப் பிரட்டித்தண்ணி ஊத்துவார். பேந்து ஆச்சி அப்புவுக்கு இதே மாதிரி சீயக்காய் பிரட்டித்தண்ணி அள்ளி ஊத்துவா.
பேந்து ரெண்டு பேரும் மாறி மாறி மூண்டு மூண்டு வாளி சோஞ் சொல்லி ஊத்தி தோஞ்சு முடிப்பினம்.சிவம்..சிவம் ..எண்டிறதைத்தான் அவை சோஞ்..சோஞ்..எண்டிறவை. சிலர் சுகம் சுகம் எண்டிறதைத்தான் சோஞ்..சோஞ்..எண்டிறவை எண்டுவினம் .பேந்து அப்புவின்ரை பழைய நாலு முழத்தால ரெண்டு பெரும் ஆளாளுக்கு மாறி மாறி ஈரந்துடைப்பினம். பேந்து ஆச்சி ஒரு சின்னப் பழஞ்சீலையை தலையில மயிரோட சேத்து முடிவா.பேந்து சாமி கும்பிட்டு முடிய அடுக்களைக் குந்தில இருந்து இளச்சூட்டுச் சோத்தை ஆட்டிறைச்சிகறியோட சாப்பிட்டுப் போட்டு தலைவாசல் குந்தில நல்ல ஒரு நித்திரை அடிப்பினம்.
உண்ணாணச் சொன்னா உப்பிடியான சாப்பாட்டு முறையால வாழ்க்கை முறையால அப்புவுக்கும் ஆச்சிக்கும் எப்பவும் காதலர்தினந்தான். டேற்றிங் மேற்றிங் எல்லாம் ஒழுங்கா நாலு சுவருக்கை தாராளமா நடக்கும். சிலவேளை பகலிலை என்னதான் சண்டை பிடிச்சினம் எண்டாலும் இரவிலை